18 June 2013

நடத்தையில் சந்தேகம் கழுத்தை நெரித்து மனைவியை கொன்ற கணவர்

நடத்தையில் சந்தேகம்  கழுத்தை நெரித்து மனைவியை கொன்ற கணவர் 


இராமநாதபுரம்:

            இராமநாதபுரம் அருகே உள்ள உச்சிபுளி அகத்தியர் கூட்டம் கிராமத்தைச் சேர்ந்த வர் முனியாண்டி. இவரது மகன் ஆண்டி (வயது35), கூலித்தொழிலாளி. இவரது மனைவி மலைராணி (30). 


                              இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்களாகிறது. ஒரு மகனும், மகளும் உள்ளனர். மலைராணி கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். அவரது நடத்தையில் கணவர் ஆண்டிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு கணவன்- மனைவிக்கு இடையே இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆண்டி, மனைவி மலை ராணியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் ஆண்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து மலைராணியின் சகோதரர் களஞ்சியம் உச்சிபுளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து தலை மறைவான ஆண்டியை தேடிவருகிறார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top