தேவிபட்டிணம் அருகே
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி
வாலிபர் பலி
இராமநாதபுரம்:
தேவிபட்டிணம் போலீஸ் சரகம் சித்தார்கோட்டை பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 52) இவரது மகன் இருளேஷ்குமார் (வயது 23). இவர் தனது நண்பர் புருசோத்தமன் (15)யுடன் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பும் போது பசும்பொன்நகர் அருகே டிராக்டர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருளேஷ்குமார், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
புருசோத்தமன் காயத்துடன் மீட்கப்பட்டு இராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தேவிபட்டிணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவர் குணாநிதியை கைது செய்தார்.
0 comments