18 June 2013

2014 மக்களவை தேர்தலில் காங்கிரசின் அடுத்த பிரதமர் ராகுல்காந்திதான்

2014 மக்களவை தேர்தலில் காங்கிரசின் அடுத்த  பிரதமர் 

ராகுல்காந்திதான் 
         

புதுடெல்லி: 

                  அடுத்த ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் பதவியை ராகுல் காந்திக்கு விட்டுத் தர தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.ஜனாதிபதி மாளிகையில் புதிய அமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்ட பிறகு பிரதமர் மன்மோகன் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் காந்தி பிரதமர் ஆக்கப்படுவாரா? என்று நிருபர்கள் கேட்டனர். 

அதற்கு மன்மோகன் அளித்த பதில்:ராகுல் காந்தி  இயற்கையாகவே காங்கிரசின் தலைவராக உருவானவர். அப்படி ஒரு இளம் தலைவர் பிரதமர் ஆவதை வரவேற்கிறேன். என்னை பொறுத்தவரை பிரதமர் பதவியை ராகுலுக்கு விட்டுத் தர எப்போதுமே தயாராகவே இருக்கிறேன். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 3வது முறையாக வெற்றி பெறும். 

அப்போது, ராகுல் காந்திக்கு பிரதமர் பதவியை மகிழ்ச்சியோடு விட்டுத் தருவேன். இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top