சாம்பியன்ஸ் கோப்பை வென்ற
இந்திய வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு
புதுடெல்லி, ஜூன் 24:
ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் இந்திய அணிக்கு ரூ.12 கோடியும், 2-ம் இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு ரூ.6 கோடியும் பரிசுத்தொகை கிடைத்தது.
இந்நிலையில், இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து வீரர்களுக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது. அணியின் ஊழியர்களுக்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் 12 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு தங்க பந்து பரிசு வழங்கப்பட்டுள்ளது. 363 ரன்கள் குவித்த துவக்க வீரர் ஷிகார் தவான், தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டதுடன், தங்க கிரிக்கெட் மட்டை பரிசினையும் தட்டிச்சென்றார்.
0 comments