17 May 2013

வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்வது எப்படி?

வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்வது எப்படி?


கோடை வெப்பத்தின் உச்சமாக கருதப்படும் கத்திரி வெயில் வாட்டத்தொடங்கிவிட்டது...இந்த முறை கத்திரி வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்? மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள்? வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை எப்படி காத்துக்கொள்வது என்பதை தெரிந்து கொள்வோம்....!

வாட்டத்தொடங்கிய கத்திரி வெயில்...:

"கத்திரி வெயில் நம்மை சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. ஆண்டுதோறும் அக்கினி நட்சத்திரத்தின் தாக்கம் வந்து சென்றாலும் சில வருடங்களாக அதன் வெப்பநிலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது" என சென்னை வானிலை மைய தலைவர் ஒய்.இ.ஏ.ராஜ் கூறினார்.

"எதிர்காலத்தில் தாக்கம் அதிகமாக இருக்கும்":

சராசரியாக ஒரு மனித உடலின் வெப்ப நிலை என்பது குளிர்காலத்தில் 28 முதல் 32 டிகிரி செல்ஸியஸாகவும், மழைக்காலத்தில் 30 முதள் 32 டிகிரியாகவும் இருக்க வேண்டும். இதுபோல், கோடைக்காலத்தில் 35 முதல் 37 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கும். மனித உடல் இயங்கக்கூடிய சரியான வெப்பநிலை 36.9 டிகிரி செல்ஸியஸ். ஆனால் சில வருடங்களாக புவியின் வெப்ப நிலை அதிகரித்தவண்ணம் உள்ளது. அதுவும் கத்திரிவெயில் காலத்தில், அதன் தாக்கத்தை கடந்த சில வருடங்களுடன் ஒப்பிட்டால் பெரிய மற்றம் இருப்பதாக வானியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

2011-2013-ஆம் ஆண்டுகளில் மே மாத முதல் வாரத்தின் வெப்ப நிலையை கணக்கிடும்போது, சென்னையில் பதிவான அதிகபட்ச வெப்ப நிலையின் சராசரியாக 37.6 டிகிரி செல்சியஸாக இருக்கிறது. இதே போன்று திருச்சியின் அதிகபட்ச வெப்ப நிலை சராசரி 39.3 டிகிரியும்,2011-2013-ல் மதுரையின் அதிகபட்ச சராசரி 39.0 ஆகவும் இருக்கிறது, மேலும் மிக அதிகபட்ச சராசரியாக வேலூரில் 41.3 டிகிரியளவுக்கும் பதிவாகியுள்ளது. இந்த பதிவுகளைக் காணும்போது வெப்பநிலையானது கடந்த 3 ஆண்டுகளில் வேகமாக உயர்வதை நம்மால் அறியமுடிகிறது. இந்த வெப்பநிலை மனித உடல் இருக்க வேண்டிய வெப்ப நிலையைவிட அதாவது 36.9 டிகிரி செல்சியஸை விட அதிகம்.

எப்படி கத்திரி வெயிலை எதிர்கொள்வது?

இயற்கையை நாம் மீறும்போதெல்லாம், இயற்கை நம்மை எச்சரிப்பதை நாம் கண்டுகொள்வதில்லை.இந்த வெப்ப நிலை உயர்வும் அப்படித்தான். இந்த மாறுபாட்டிற்கு காரணங்கள் பல கூறப்பட்டாலும், இப்போதய சூழ்நிலையில், நாம் செய்யவேண்டியது, இந்த கத்திரி வெயிலின் தாக்கத்தில் இருந்து நம் ஆரோக்கியத்தை காத்துக்கொள்வதும், இயற்கை மீது அக்கறை கொண்டு அதனை செழிக்கச்செய்வதுமே....!
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top