இராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்கள் ஏற்றிச்செல்லும் லாரிகளால் தொடரும் விபத்துகள் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்
இராமநாதபுரம்:
பேச்சாளை மீன்களை ஏற்றிச்செல்லும் லாரிக ளால் தேசிய நெடுஞ் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரி ழப்புகள் அதிகரிக்கும் அபாயம் நீடிக்கிறது.
பேச்சாளை மீன்கள்
இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேசுவரம், தங்கச்சிம டம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பிடிபடும் பேச்சாளை மீன்களுக்கு கேரளா மாநிலத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் இப்பகுதியில் பிடிபடும் மீன் களை ஏஜெண்டுகள் லாரிகள் மூலம் அங்கு கொண்டு செல் கின்றனர். வளவளப்பு தன்மை கொண்ட இவ்வகை மீன் களை தேசிய நெடுசாலை வழி யாக லாரிக ளில் கொண்டு செல்லும் போது அதில் இருந்து வடியும் கழிவு நீர் சாலைகளில் துர்நாற் றத்தை ஏற்படுத்து கின்றன.
மேலும் மீன்களின் கழிவுநீரும், அதனை பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகள் கரைந்து ஒன் றாக சேர்ந்து சாலை களை வளவளப்பு தன்மையுடையதாக மாற்றி விடுகிறது. இதனால் இராமேசுவரம் முதல் தூத்துக்குடி வரை தேசிய நெடுஞ்சாலைகள் பாதிக்கப் படு கிறது. இதில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் வளவளப்புடைய கழிவுநீரால் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தை சந்தித்து வருகின் றன. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் தேசிய நெடுஞ்சாலைகளில் வழுக்கி விழுந்து காயமடை வதுடன் உயிரிழப்புகளும் ஏற் படுகிறது.
நடவடிக்கை
கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சிப்புளி அருகே இவ்வாறு பேச்சாளை மீன் கள் ஏற்றிச்சென்ற லாரியில் இருந்து வழிந்த கழிவுநீரால் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் வழுக்கி விழுந்து பலத்த காயமடைந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் இராமநாதபுரம் மாவட்டத் தில் அடிக்கடி நிகழ்ந்து வரு கிறது. குறிப்பாக இரவு நேரத் தில் சாலைகளில் இவ்வகை கழிவுகள் கண்ணுக்கு தெரியாததால் பெண்கள் மற்றும் சிறுகுழந்தைகளுடன் வாக னங்களில் வருவோர் நிலை குலைந்து குடும்பத்தோடு காயமடையும் அபாயமும் உள்ளது.
வலியுறுத்தல்
மேலும் பேச்சாளை லாரிக ளில் இருந்து வழியும் கழிவுநீர் காற்றில் பறந்து சாலையில் நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் மீது பட்டு கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல் வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பேச் சாலை மீன்கள் ஏற்றிச் செல்ல தடை விதிப்பது டன் தேசிய நெடுஞ்சாலைகளில் கழிவுநீரை கொட்டிச் செல்லும் மீன் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
0 comments