வானில் இருந்து கருவிகளுடன் கீழே விழுந்த பலூன்
கீழக்கரை அருகே பரபரப்பு
இராமநாதபுரம்:
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கோகுல்நகரை சேர்ந்தவர் கிருபைராஜ். இவரது வீட்டின் அருகே நேற்று மாலை ஒரு மர்ம பலூன் வானில் இருந்து கீழே விழுந்தது. மஞ்சள் நிறத்தில் சுமார் 3½ அடி உயரம் இருந்த அந்த பலூனில் ஒரு சில தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன. இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கீழக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கோகுல்நகரை சேர்ந்தவர் கிருபைராஜ். இவரது வீட்டின் அருகே நேற்று மாலை ஒரு மர்ம பலூன் வானில் இருந்து கீழே விழுந்தது. மஞ்சள் நிறத்தில் சுமார் 3½ அடி உயரம் இருந்த அந்த பலூனில் ஒரு சில தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன. இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கீழக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் பலூனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அது என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ஆய்வுக்காக பறக்கவிட்டதா? அல்லது கடலோர காவல் படையினர் வானிலை குறித்து ஆய்வு செய்வதற்காக கருவிகளுடன் பறக்கவிட்ட பலூன் உடைந்து கீழே விழுந்ததா? என்று கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானில் இருந்து சில கருவிகளுடன் பலூன் விழுந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
0 comments