23 November 2013

அந்தரங்கத்தை படம் பிடித்து மிரட்டல் தொழிலதிபர் மீது நடிகை கண்ணீர் புகார்

அந்தரங்கத்தை படம் பிடித்து மிரட்டல் 
தொழிலதிபர் மீது நடிகை கண்ணீர் புகார்



சென்னை:

         சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, காத்தவராயன், கேம், மானஸ்தன் உள்பட 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராதா. தெலுங்கு படங்களிலும் நடித்துள் ளார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். 

அதில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநிலம் நெல்லூர் எனது சொந்த ஊர். தாயாருடன் வசிக்கிறேன். இயற்பெயர் பர்வீன். சினிமாவுக்காக ராதா என்று பெயரை மாற்றிக் கொண்டேன். தமிழில் 10க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள் ளேன். தெலுங்கு படத்திலும் நடித்துள்ளேன்.


2008ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி எனக்கு தெரிந்த சினிமா தயாரிப்பாளர் சவுந்தர் ராஜன் என்பவர் திருவல்லிக்கேணி தைபூன் அலிகான் சாலையை சேர்ந்த பைசூல் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.பைசூல் சினிமா தயாரிப்பாளர் என்று என்னி டம் அறிமுகம் ஆனார். அவர் தயாரிக்கும் படத்துக்கு என்னை ஒப்பந்தம் செய்தார்.முன் பணமாக  10 ஆயிரம் கொடுத்தார்.

படம் தயாரிப்பது தொடர்பாக என் வீட்டிற்கு அவர் அடிக்கடி வர ஆரம்பித் தார். என்னை நேசிப்பதாக கூறிய அவர், திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்தார். அதன் படி, ஆசை வார்த்தை கூறி 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுவரை என்னுடன் உறவு கொண்டார். கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வசித்தோம். நான் கர்ப்பம் ஆனேன். அதை கலைக்க சொன் னார். வைர வியாபாரத் தில் தற்போது நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

 எனவே, அதில் இருந்து மீண்ட உடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். அதை நம்பி கர்ப்பம் கலைக்கப்பட்டது.இந்நிலையில் பைசூல் வைர வியாபாரம் செய்வதாக பொய் சொல்லி அதை விரிவு படுத்துவதாக கூறி தன்னி டம் படிப்படியாக  50 லட்சம் பெற்றுள்ளார்.

அவர் சொல்வது பொய் என்று தெரியவந்த உடன் அவரை பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். அப்போது, பைசலுக்கு ஏற்கனவே, திருமணமாகி அவரது முதல் மனைவி திருமண உறவை முறித்து விட்டு சென்றிருப் பது தெரியவந்தது.இதுகுறித்து, அவரிடம் கேட்டபோது என்னை மிரட்ட ஆரம்பித்தார். திருமணம் செய்து கொள்ளவும் மறுத்து விட்டார். 

போலீசுக்கு சென்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார். எனவே, தன்னை ஏமாற்றிய பைசூல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த தி.நகர் துணை கமிஷனர் பகலவனுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.புகார் குறித்து நடிகை ராதா கூறியதாவது:பைசூல் தன்னை ஷியாம் என்ற பெயரில் தொடர்பு கொண்டு மோசடி செய்தார்.

 அவருக்கு திருமணம் ஆனது எனக்கு முதலில் தெரியாது. அவரை உண்மையாக நேசித்தேன்.நாங்கள் இருவரும் கணவன், மனைவிபோல் இருந்தபோது, அதை தனது செல்போனில் படம் பிடித்தார். ஏன் அந்தரங்கத்தை செல்போனில் படம் பிடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நீ இல்லாத நேரத்தில் உன் நினைவாக அதை பார்ப்பதற்காகத் தான் என்று கூறினார். 

தற்போது, போலீசுக்கு சென்றால் அந்த அந்தரங்க காட்சிகளை இணைய தளத்தில் வெளி யிட்டு அவமானப்படுத்தி விடுவேன் என்று மிரட்டுகிறார். பைசூலை நம்பி திரைப்பட தொழிலை விட்டு விட்டேன். பணத்தையும் இழந்து விட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top