இராமநாதபுரத்தில் வாலிபர் குத்திக் கொலை: 3 பேர் கைது
இராமநாதபுரம், நவ. 3:
இராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ளது சத்யாநகர். இந்த பகுதியில் வசிப்பவர் தங்கமணி. இவரது மகன் சிலம்பரசன் (வயது 24).
இவர் நேற்று மாலை ராமநாதபுரம் காட்டுப் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள அய்யப்பன் கோவில் நகரில் நண்பர்கள் பாலமுருகன் (24), அகமது (20) பிரபு தேவா (20) ஆகியோருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது 4 பேர் அங்கு வந்தனர். அவர்களுக்கும், சிலம்பரசன் தரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் மோதலாக மாற, 4 வாலிபர்களும் சேர்ந்து உளியால் சிலம்பரசனை குத்தினர். இதனை தடுக்க வந்த பிரவுதேவாவுக்கும் குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் இராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு முதலுதவி பெற்றதும், சிலம்பரசன் ஆபத்தான நிலையில் இருந்ததால், மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பிரபுதேவாவுக்கு இராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிரசிகிச்சை அளிக்கப்படடு வருகிறது. கொலை குறித்த தகவல் கிடைத்ததும், இராமநாதபுரம் டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு முரளீதரன், பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணசேன் ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கொலை தொடர்பாக அய்யப்பன் கோவில் நகரைச் சேர்ந்த காளிதாஸ் மகன் வாசுதேவன் (23) விக்னேஸ்வரன் (19) பாரதிநகர் பாலமுருகன் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாசுதேவனின் சகோதரர் சக்திவேலை போலீசார் தேடி வருகின்றனர்.
இராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ளது சத்யாநகர். இந்த பகுதியில் வசிப்பவர் தங்கமணி. இவரது மகன் சிலம்பரசன் (வயது 24).
இவர் நேற்று மாலை ராமநாதபுரம் காட்டுப் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள அய்யப்பன் கோவில் நகரில் நண்பர்கள் பாலமுருகன் (24), அகமது (20) பிரபு தேவா (20) ஆகியோருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது 4 பேர் அங்கு வந்தனர். அவர்களுக்கும், சிலம்பரசன் தரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் மோதலாக மாற, 4 வாலிபர்களும் சேர்ந்து உளியால் சிலம்பரசனை குத்தினர். இதனை தடுக்க வந்த பிரவுதேவாவுக்கும் குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் இராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு முதலுதவி பெற்றதும், சிலம்பரசன் ஆபத்தான நிலையில் இருந்ததால், மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பிரபுதேவாவுக்கு இராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிரசிகிச்சை அளிக்கப்படடு வருகிறது. கொலை குறித்த தகவல் கிடைத்ததும், இராமநாதபுரம் டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு முரளீதரன், பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணசேன் ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கொலை தொடர்பாக அய்யப்பன் கோவில் நகரைச் சேர்ந்த காளிதாஸ் மகன் வாசுதேவன் (23) விக்னேஸ்வரன் (19) பாரதிநகர் பாலமுருகன் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாசுதேவனின் சகோதரர் சக்திவேலை போலீசார் தேடி வருகின்றனர்.
0 comments