முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த
இந்துவின் உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்:
இஸ்லாமாபாத், அக்.9:-
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் புரோ பீல். இந்து தலித் சமுதாயத்தை சேர்ந்த இவர் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அவரது உடலை உறவினர்கள் பதின் மாவட்டத்தில் உள்ள ஹாஜி பகீர் இடுகாட்டில் அடக்கம் செய்தனர். அடக்கம் செய்த 12 மணி நேரத்தில் ஒரு கும்பல் அங்கு வந்து புரோ பீல் உடலை தோண்டி எடுத்து வெளியே வைத்தனர். முஸ்லிம்களின் இடுகாட்டில் இந்து உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று அந்த கும்பல் எதிர்ப்பு தெரிவித்தது.
சுமார் 8 மணி நேரமாக திறந்த வெளியில் அந்த உடல் இருந்தது. இதுபற்றி தகவல் கிடைத்த புரோவின் உறவினர்கள் அங்கு வந்தனர். ஆனாலும் அவர்கள் அடக்கம் செய்த உடலை மீண்டும் அகற்ற முடியாது என்று பயந்து கொண்டே கூறினர். இதனால் அவர்கள் தாக்கப்படும் சூழ்நிலை உருவானது. பின்னர் உள்ளூர் நிலச்சுவான்தார் ஒருவர் தனது நிலத்தில் அந்த உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கினார். அதன் பின்னரே அங்கு நிலைமை சீரானது.
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் புரோ பீல். இந்து தலித் சமுதாயத்தை சேர்ந்த இவர் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அவரது உடலை உறவினர்கள் பதின் மாவட்டத்தில் உள்ள ஹாஜி பகீர் இடுகாட்டில் அடக்கம் செய்தனர். அடக்கம் செய்த 12 மணி நேரத்தில் ஒரு கும்பல் அங்கு வந்து புரோ பீல் உடலை தோண்டி எடுத்து வெளியே வைத்தனர். முஸ்லிம்களின் இடுகாட்டில் இந்து உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று அந்த கும்பல் எதிர்ப்பு தெரிவித்தது.
சுமார் 8 மணி நேரமாக திறந்த வெளியில் அந்த உடல் இருந்தது. இதுபற்றி தகவல் கிடைத்த புரோவின் உறவினர்கள் அங்கு வந்தனர். ஆனாலும் அவர்கள் அடக்கம் செய்த உடலை மீண்டும் அகற்ற முடியாது என்று பயந்து கொண்டே கூறினர். இதனால் அவர்கள் தாக்கப்படும் சூழ்நிலை உருவானது. பின்னர் உள்ளூர் நிலச்சுவான்தார் ஒருவர் தனது நிலத்தில் அந்த உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கினார். அதன் பின்னரே அங்கு நிலைமை சீரானது.
0 comments