வடபழனியில் காரில் விபசாரம்: 2 அழகிகள் சிக்கினர்
கோயம்பேடு, அக். 8:
வடபழனி 100 அடி சாலையில் உள்ள பிரபல ஓட்டல் அருகே காரில் விபசாரம் நடப்பதாக அரும்பாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் அருள் சந்தோசமுத்து மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சாலை ஓரத்தில் நின்ற சொகுசு கார் போலீசாரை பார்த்ததும் வேகமாக சென்றது.
சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை சினிமா பாணியில் விரட்டிச் சென்றனர். அசோக்நகர் அருகே காரை மடக்கி பிடித்தபோது அதில் டிரைவரும், 2 இளம்பெண்களும் இருப்பது தெரிந்தது.
அவர்கள் வேளச்சேரியைச் சேர்ந்த சிவசரவண மணிராம் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த 20 வயதுடைய விபசார அழகிகள் என்பது தெரிய வந்தது.
விடுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபடுவதால் புரோக்கர்கள் மூலம் வாடிக்கையாளர்கள் வரவழைத்து காரிலேயே உல்லாசமாக இருந்ததாகவும், இதற்கு ரூ. 20 ஆயிரம் வரை வசூலித்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து டிரைவர் சிவசரவண மணிராமை போலீசார் கைது செய்தனர். அழகிகள் 2 பேரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுகிறார்கள். அவர்களிடம் விபசார புரோக்கர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
வடபழனி 100 அடி சாலையில் உள்ள பிரபல ஓட்டல் அருகே காரில் விபசாரம் நடப்பதாக அரும்பாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் அருள் சந்தோசமுத்து மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சாலை ஓரத்தில் நின்ற சொகுசு கார் போலீசாரை பார்த்ததும் வேகமாக சென்றது.
சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை சினிமா பாணியில் விரட்டிச் சென்றனர். அசோக்நகர் அருகே காரை மடக்கி பிடித்தபோது அதில் டிரைவரும், 2 இளம்பெண்களும் இருப்பது தெரிந்தது.
அவர்கள் வேளச்சேரியைச் சேர்ந்த சிவசரவண மணிராம் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த 20 வயதுடைய விபசார அழகிகள் என்பது தெரிய வந்தது.
விடுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபடுவதால் புரோக்கர்கள் மூலம் வாடிக்கையாளர்கள் வரவழைத்து காரிலேயே உல்லாசமாக இருந்ததாகவும், இதற்கு ரூ. 20 ஆயிரம் வரை வசூலித்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து டிரைவர் சிவசரவண மணிராமை போலீசார் கைது செய்தனர். அழகிகள் 2 பேரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுகிறார்கள். அவர்களிடம் விபசார புரோக்கர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
0 comments