பாகிஸ்தான் தொடர் தாக்குதல் எல்லையோர மக்கள் கூண்டோடு வெளியேறுகின்றனர்
ஜம்மு:
பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால், காஷ்மீர் எல்லை யோர கிராம மக்கள் கூண்டோடு வெளியேறி வருகின்றனர். காஷ்மீர் மாநிலத்தின் சம்பா எல்லைப் பகுதியிலுள்ள 17 ராணுவ முகாம்கள் மற்றும் கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணு வம் கடந்த 2 நாட்களாக சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வப்போது ராக்கெட் குண்டுகளும் வீசப்படுகின்றன. இதனால், 11 பேர் காயம் அடைந்தனர்.
அவர்களை காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர்.இதுதொடர்பாக, எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சம்பா மற்றும் ஜம்மு மாவட்ட எல்லைப் பகுதியிலுள்ள ராம்கார், ஆர்னியா, ஆர்எஸ் புரா மற்றும் அக்னூர் கிராமங்களில், நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் ராணுவம் சரமாரி துப்பாக் கிச் சூடு நடத்தியது. அத்தோடு ராக்கெட் குண்டுகளையும் வீசியது.
இது, நேற்று அதிகாலை 4 மணி வரையிலும் தொடர்ந்தது’’ என்றனர்.கடந்த 2 நாட்களாக குண்டு மழை பொழிவதால், சம்பா பகுதியிலுள்ள எல்லையோர கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். கர்கால் பகுதியிலுள்ள சிதார் கிராமத்திலிருந்து 250 பேர் வெளி யேறினர். எஸ்எம் புரா மற்றும் ஜாசோ சாக் கிராமங்களைச் சேர்ந்த மக்களும் வெளியேறி வேறு கிராமத்தில் தங்கியிருக்கின்றனர்.
இது, நேற்று அதிகாலை 4 மணி வரையிலும் தொடர்ந்தது’’ என்றனர்.கடந்த 2 நாட்களாக குண்டு மழை பொழிவதால், சம்பா பகுதியிலுள்ள எல்லையோர கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். கர்கால் பகுதியிலுள்ள சிதார் கிராமத்திலிருந்து 250 பேர் வெளி யேறினர். எஸ்எம் புரா மற்றும் ஜாசோ சாக் கிராமங்களைச் சேர்ந்த மக்களும் வெளியேறி வேறு கிராமத்தில் தங்கியிருக்கின்றனர்.
‘‘இந்திய அரசும், எல்லைப் பாதுகாப்பு படையும் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதில்லை. அதனால்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது’’ என்று மக்கள் குற்றம்சாட்டினர்.
பாஜ கண்டனம்:
பாஜ தேசிய செய்தி தொடர்பா ளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ‘‘கடந்த 2 மாதங்களாக பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலை, எந்த வகையி லும் ஏற்றுக்கொள்ள முடியாது. தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அரசியல் ரீதியாக தகுந்த பாடம் புகட்ட வழிகள் இருக்கின்றன’’ என்றார்.
0 comments