7 October 2013

இந்து தலைவர்களை கொலை செய்ததாக தீவிரவாதி பிலால் மாலிக் ஒப்புதல்

இந்து தலைவர்களை கொலை செய்ததாக 
தீவிரவாதி பிலால் மாலிக் ஒப்புதல்


வேலூர் :
            இந்து தலைவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி பிலால் மாலிக், வேலூர் ஜேஎம் 3 நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டான். வரும் 18ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த் ரெட்டி, சேலத்தில் பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ், மதுரையில் அத்வானியை கொலை செய்ய முயன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளிகள் போலீஸ் பக்ருதீன் சென்னையிலும், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரை ஆந்திர மாநிலம் புத்தூரில் அதிரடி நடவடிக்கை எடுத்து போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர்.

பிலால் மாலிக்கை, சிபிசிஐடி போலீசார் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூருக்கு அழைத்து வந்தனர். வேலூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து அவனிடம் பல மணி நேரம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். இதில் போலீசாரின் கேள்விகளுக்கு பிலால் மாலிக் ஆரம்பத்தில் முரண்டு பிடித்தாலும், பின்னர் படிப்படியாக அரவிந்த் ரெட்டி, வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரை தாங்கள் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

 நேற்று கோர்ட்டு விடுமுறை என்பதால், வேலூர் ஜேஎம்,3 நீதிமன்ற நீதிபதி சிவகுமார் வீட்டில், பிலால் மாலிக்கை சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர்.  வரும் 18ம் வரை சிறை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சிபிசிஐடி எஸ்பி அன்பு நிருபர்களிடம் கூறுகையில், ‘பிலால் மாலிக்கை நீதிபதி முன் ஆஜர்படுத்தினோம். புத்தூரில் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் கைது செய்யப்பட்ட வீட்டில் இருந்து 10 கிலோ வெடி மருந்துகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பக்ருதீனிடம் விசாரணை நடத்தி வருகிறோம். தொடர்ந்து வரும் 18ம் தேதிக்கு பிறகு பிலாலை காவல் எடுத்து விசாரிப்போம் என்றார்.

முரண்டு பிடித்த பிலால் மாலிக்: 

                                நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பிலால் மாலிக்கை படம் பிடிக்க போட்டோகிராபர்கள் காத்துக்கொண்டிருந்தனர். ஆத்திரம் அடைந்த பிலால், போட்டோகிராபர்களை பார்த்து, போட்டோ எடுக்கிறீர்களா? நல்லா எடுங்க. இன்னும் நல்லா எடுங்க என்று எகிறி குதித்து முகமூடியை அவிழ்க்க முயன்று உரத்த குரலில் சத்தம் போட்டான். வேனை நிறுத்த சொன்ன போலீ சார் மீதும் பாய்ந்தான். அப்போது வேனில் இருந்த போலீசார் பிலால் மாலிக்கை சமாதானம் செய்தனர்.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top