20 October 2013

சேலம் கொள்ளை கும்பல் அட்டகாசம் அரசு அதிகாரி, மகன் படுகொலை

சேலம் கொள்ளை கும்பல் அட்டகாசம் அரசு அதிகாரி, மகன் படுகொலை



சேலம்: 

சேலத்தில் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் அரசு அதிகாரியுடன் அவரது மகனையும் வெட்டிக் கொன்றுள்ளது. பலத்த காயம் அடைந்த அவரது மனைவி உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டார்.

சேலம் கன்னங்குறிச்சி அருகே மகேந்திரபுரி பாலாஜி நகரில் வசித்து வந்தவர் ராமகிருஷ்ணன் (60). இவர் நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜாத்தி (58). இவர் சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களது ஒரே மகன் ராஜசேகர்(32). முதுநிலை பொறியியல் படிப்பு முடித்தவர். இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவி இவரைவிட்டு பிரிந்ததால் பெற்றோருடன் வசித்து வந்தார். 

இவர்களது வீட்டில் கட்டுமான பணி நடக்கிறது.இந்நிலையில், நேற்று பகல் சுமார் 2 மணி அளவில் கட்டுமான பணியை செய்து வந்த மேஸ்திரி கோவிந்தன், பணம் வாங்குவதற்காக வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் கதவை திறந்து, உள்ளே எட்டிப்பார்த்தபோது வீடு முழுவதும் ரத்தமாக கிடந்தது. படுக்கை அறையின் வாசலில் ராமகிருஷ்ணனும், படுக்கையில் மகனும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

ராஜாத்தி பலத்த வெட்டுக்காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வெளியே ஓடிவந்து அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் கூறினார். பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்து போலீஸ் கமிஷனர் மாகாளி, துணை கமிஷனர்கள் பாபு, பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

உயிருக்கு போராடிய ராஜாத்தி உடனடியாக சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த ராமகிருஷ்ணன், ராஜசேகர் ஆகியோரது உடல் மற்றும் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.

உயிருக்கு போராடி வரும் ராஜாத்தி, போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘காலை 8 மணிக்கு சமையல் செய்து கொண்டிருந்தேன். அப்போது 4 பேர் வீட்டுக்குள் மின்னலாக நுழைந்து எங்களை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்Õ என்று தெரிவித்தார்.ராஜாத்தியின் கணவர் ராமகிருஷ்ணன் விருப்ப ஓய்வு பெற்ற பணத்தை கொண்டு, அப்பகுதியில் நகை அடகு கடை நடத்தி வந்துள்ளார். இதனால் வீட்டில் ஏராளமான நகை, பணம் இருந்துள்ளது. இதனை நோட்டமிட்ட ஆசாமிகள் நேற்று வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top