ரவுடி கோட்டை பட சர்ச்சை: வழக்குக்கு பயந்த நடிகை ஹன்சிகா?
நடிகை ஹன்சிகா தெலுங்கில் நடித்த 'சீதாரா முல கல்யாணம் லங்காலே' படத்தை தமிழில் 'ரவுடி கோட்டை' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட ஏற்பாடு நடக்கிறது. இதற்கு ஹன்சிகா எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
என் அனுமதி இல்லாமல் படத்தை தமிழில் ரிலீஸ் செய்யக்கூடாது என்று கண்டித்தார். நடிகர் சங்கத்திலும் இது குறித்து புகார் அளித்து இருப்பதாக கூறினார். ஆனால் படத்தை தமிழில் ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர் சுந்தரலட்சுமி தெலுங்கு தயாரிப்பாளரிடம் முறைப்படி அனுமதி பெற்றுவிட்டோம் என்றும் படத்தை வெளியிட ஹன்சிகா இடையூறு செய்தால் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்றும் பதிலடி கொடுத்தார்.
இதையடுத்து ஹன்சிகா தரப்பு கப்சிப் ஆகியுள்ளது. எதிர்ப்பை ஹன்சிகா கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சங்கத்திலும் ஹன்சிகா இதுவரை புகார் அளிக்கவில்லை. புகார் தராமலேயே புகார் கொடுத்ததாக ஹன்சிகா பொய் சொல்லி இருப்பதாக நடிகர் சங்க வட்டாரத்தில் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதையடுத்து 'ரவுடிக் கோட்டை' படத்தை தமிழில் வெளியிடும் வேலைகள் விறுவிறுப்பாகியுள்ளன.
இப்படம் ஹன்சிகா சினிமாவில் அறிமுகமானபோது எடுக்கப்பட்டது. எனவே தாராள கவர்ச்சி காட்டியுள்ளராம். இதற்காகவே அது தமிழில் வருவதை எதிர்த்தார் என்கின்றனர்.
0 comments