ஆர்.எஸ்.மங்கலம் அருகே இளம்பெண் கடத்தல்: போலீசில் தந்தை புகார்
இராமநாதபுரம், செப். 24:
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ஆபிராய் கிராமத்தை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது45), விவசாயி. இவரது மகள் சூரியா (19). இவர் 10–ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த 21–ந்தேதி இரவு வீட்டில் இருந்த சூரியாவை காணவில்லை. இதனால் கவலை அடைந்த பூமிநாதன் மகளை பல இடங்களில் தேடினார். எங்கும் அவரை காணவில்லை.
இதனை தொடர்ந்து அவர் ஆர்.எஸ்.மங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரில் ஏசுபுரத்தை சேர்ந்த காசி மகன் கார்த்தி (24) என்பவர் எனது மகள் சூரியாவை கடத்தி சென்று விட்டார். அவரை மீட்டு கொடுக்கும்படி குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்–இன்ஸ்பெக்டர் கார்த்திக் ராஜா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 comments