இராமநாதபுரத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5¼ பவுன் செயின் பறிப்பு
இராமநாதபுரம், செப். 17–
இராமநாதபுரம் அருகே உள்ள ஆனைக்குடியை சேர்ந்தவர் செல்லமணி (வயது48), கூலி தொழிலாளி. இவரது தாயார் தெய்வானை (70). இராமநாதபுரத்தில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு நேற்று செல்லமணியும், தெய்வானையும் சென்று இருந்தனர்.
திருமணம் முடிந்ததும் அவர்கள் இராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் பஸ்சில் ஏறினர். பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்தது.
இதை பயன்படுத்தி யாரோ ‘மர்ம‘ ஆசாமி தெய்வானை கழுத்தில் கிடந்த 5¼ பவுன் செயினை ‘அபேஸ்’ செய்துவிட்டான். சிறிது நேரம் கழித்து தெய்வானை கழுத்தை பார்த்தார். செயினை காணவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ செயினை பறித்து விட்டான்.
இது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப் பதிவு செய்து ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறித்த ஆசாமியை தேடி வருகிறார்.
0 comments