கனமழை எதிரொலியாக
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
சென்னை: நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழை எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் +1 மற்றும் +2 வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுகள் இன்று திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்றிரவு தொடங்கிய கனமழை இன்று அதிகாலை வரை நீடித்தது. நகரின் பல இடங்களில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். ஜெர்மனியிலிருந்து சென்னைக்கு வந்த விமானம், பலத்த மழை காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாததால் பெங்களூருவிற்கு திருப்பிவிடப்பட்டது. மேலும் சென்னையிலிருந்து விமானங்கள் புறப்படுவதிலும், விமானங்கள் தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. .
மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறதுஇன்று காலையும் மழை தொடர்வதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
0 comments