அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் மீண்டும் நுழைந்தது
புதுடெல்லி:
அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் மீண்டும் 20 கிமீ தூரம் ஊடுருவி 2 நாட்கள் முகாமிட்டது.
அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் உள்ள சக்லகம் பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால், இந்த பகுதிக்குள் அதன் ராணுவம் அடிக்கடி ஊடுருவி வருகிறது. கடந்த ஏப்ரலில் காஷ்மீரில் லடாக் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவம், அங்கு 20 நாட்கள் முகாம் அமைத்து தங்கியது.
இருதரப்பும் நடத்தியதீவிர பேச்சுவார்த்தைக்குப் பிறகு சீன ராணுவம் வெளியேறியது. இந்திய விமானப்படையின் பிரமாண்ட போர் விமானமான ஹெர்குலிஸ் நேற்று முன்தினம் காலை அங்கு தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சக்லகம் பகுதியில் சீன ராணுவம் கடந்த 13ம் தேதி 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊடுருவி வந்து 2 நாட்கள் முகாமிட்டு இருந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
அந்த பகுதிக்கு இந்திய ராணுவம் விரைந்து சென்றதும், சீன ராணுவம் அங்கிருந்து வெளியேறி தனது நிலைக்கு சென்றுள்ளது.
0 comments