பஞ்சாப்-இமாச்சல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்
சண்டிகர், ஆக. 29:
வடமாநிலங்களில் இன்று பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஹாசியார்பூர், அமிர்தசரஸ், ஜலந்தர் மற்றும் குர்தாஸ்பூர் மாவட்டங்களில் 3.43 மணியளவில் சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக குலுங்கின. ஆனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
ஹாசியார்வூர்-இமாச்சல பிரதேச எல்லைப் பகுதிகளிலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக, வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 comments