தேனி அருகே அண்ணியை கட்டியணைத்து முத்தமிட்ட கொழுந்தன் கைது
தேனி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி இவரது மனைவி பெருமாயி. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு பாண்டி இறந்துவிட்டார். சம்பவத்தன்று பெருமாயி தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பெருமாயியின் கொழுந்தன் முத்துப்பாண்டி என்பவர் குளியல் அறைக்குள் நுழைந்து பெருமாயியை கையைப் பிடித்து இழுத்து சில்மிஷம் செய்தார்.
திடீரென பெருமாயியை கட்டி அணைத்து அவர் முத்தமிட்டார். அதிர்ச்சியடைந்த பெருமாயி கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி பெருமாயிடம் இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த முத்துபாண்டியை கைது செய்தனர்.
0 comments