சாயல்குடி அருகே 7–ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் பலாத்கார முயற்சி: 3 மாணவர்கள் கைது
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தை சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர் சாயல்குடி பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தார். அவர் வீட்டு வாசலில் நின்றபோது அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கபில் (17), மகேஷ் (18), தவமுருகன் (17) ஆகியோர் வந்து பேசியுள்ளனர்.
அவர்கள் கூறிய சில தகவல்களை கேட்டு மாணவி அவர்களுடன் சென்றதாக கூறப்படுகிறது. முட்செடிகள் நிறைந்த பகுதிக்கு வந்த 3 மாணவர்களும், அங்கு வைத்து மாணவியை பலாத்காரம் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
ஆனால் மாணவி சத்தம் எழுப்பவே அந்த வழியாக வந்த சோலையம்மாள் என்ற பெண் அதனை கேட்டு ஊரை கூட்டிவிட்டார். ஊர்மக்கள் திரண்டு 3 மாணவர்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் யாமேக், சப்–இன்ஸ்பெக்டர் இருளப்பன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் குழந்தை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
0 comments