போர்க் குற்றம் தொடர்பான படத்தை திரையிட்டதால்
இலங்கையில் பிரெஞ்சு கலாசார விழா 'திடீர்' நிறுத்தம்
கொழும்பு, ஜூலை 16:
இலங்கை தலைநகர் கொழும்புவில் பிரெஞ்சு கலாசார விழா நடைபெற்றது. இந்த விழாவில், இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான கதையம்சத்துடன் தயாரிக்கப்பட்ட 'ஃபிளையிங் ஃபிஷ்' என்ற சினிமா திரையிடப்பட்டது.
இந்த சினிமாவில் வரும் காட்சிகள் இலங்கை அரசையும், ராணுவத்தையும் இழிவுப்படுத்தும் வகையில் உள்ளதாக கூறிய இலங்கை அரசு பிரெஞ்சு கலாசார விழாவை நிறுத்தும்படி திடீரென உத்தரவிட்டது.
ஆசியா மற்றும் பிரெஞ்சு திரைப்பட விழாக்களில் திரைப்பட விமர்சகர்களின் பாராட்டை பெற்ற இந்த திரைப்படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், கலாசார விழா குழுவினர் 'இலங்கை கலாசார குழுவினரின் ஒப்புதலுடன் செய்தோம்' என்று கூறுகின்றனர்.
0 comments