திருவனந்தபுரத்தில் பரிதாபம்
பிரியாணி சாப்பிட்ட எம்பிபிஎஸ் மாணவி சாவு
திருவனந்தபுரம் :
திருவனந்தபுரத்தில் ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி மாணவி இறந்தார். இதையடுத்து அந்த ஓட்டலுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது.
திருவனந்தபுரம் அரசு கண் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் ராஜீவ். இவரது மனைவி ஷோஜா. திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயோ கெமிஸ்ட்ரி பிரிவில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ரஞ்சு, ரஜிதா (19) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இதில் ரஞ்சு அமெரிக்காவில் படித்து வருகிறார். ரஜிதா புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இதில் ரஞ்சு அமெரிக்காவில் படித்து வருகிறார். ரஜிதா புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 26ம் தேதி இரவு ரஜிதா தனது பெற்றோருடன் திருவனந்தபுரம் கழக்கூட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார். ராஜீவும், ஷோஜாவும் சைவ உணவு சாப்பிட்டனர். ரஜிதா சிக்கன் பிரியாணி சாப்பிட்டார். பின்னர் 3 பேரும் வீட்டிற்கு சென்றனர். நள்ளிரவில் ரஜிதாவுக்கு திடீரென வயிற்றுவலியும், வாந்தியும் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை மோசமானதையடுத்து உடனடியாக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இரவு ரஜிதா இறந்தார்.
ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டதால் தான் தனது மகள் இறந்ததாக பெற்றோர் போலீசில் புகார் கூறினர்.
இதையடுத்து அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை மோசமானதையடுத்து உடனடியாக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இரவு ரஜிதா இறந்தார்.
ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டதால் தான் தனது மகள் இறந்ததாக பெற்றோர் போலீசில் புகார் கூறினர்.
திருவனந்தபுரம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சென்று பரிசோதித்தனர். மேலும் ஓட்டலில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளின் மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பினர்.
தொடர்ந்து ஓட்டலுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே ரஜிதாவின் மரணத்திற்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
0 comments