இராமநாதபுரம் ஏர்வாடி அருகே டிராக்டர் டிரைவர் தற்கொலை
இராமநாதபுரம்:
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ளது கல்பாறு. இந்த பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 32). திருமணம் ஆகி விட்டது. டிராக்டர் டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு.
தினமும் இரவில் மது குடித்துவிட்டு வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இதனால் கணவன்–மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
மாலையில் அவரது மனைவி வெளியே சென்று விட்டார். அப்போது முருகேசன் கதவை பூட்டி கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஏர்வாடி போலீசில் புகார் செய்யப் பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சப்–இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தினமும் இரவில் மது குடித்துவிட்டு வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இதனால் கணவன்–மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
மாலையில் அவரது மனைவி வெளியே சென்று விட்டார். அப்போது முருகேசன் கதவை பூட்டி கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஏர்வாடி போலீசில் புகார் செய்யப் பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சப்–இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 comments