இராமநாதபுரம் பார்த்திபனூர் அருகே
விவசாயி வீட்டில் 4 பவுன் நகை கொள்ளை
இராமநாதபுரம்:
இராமநாதபுரம் அருகே உள்ள பார்த்திபனூர் அகத்தன் குடியிருப்பை சேர்ந்தவர் ராமநாதன், விவசாயி. இவரது மனைவி லட்சுமி (60). கணவனும், மனைவியும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று இருந்தனர்.
இதை அறிந்த ‘மர்ம’ ஆசாமிகள் இரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை, 2 பவுன் தங்க காசுகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
நேற்று வெளியூர் சென்று விட்டு இராமநாதன் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த தங்க நகைகள் கொள்ளை போய் இருந்தது.
இது குறித்து அபிராமம் போலீசில் லட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
0 comments