26 July 2013

இராமேசுவரம் ரெயிலில் பெண் பயணிகளிடம் கிண்டல்: 8 வாலிபர்கள் கைது

இராமேசுவரம் ரெயிலில் பெண் பயணிகளிடம் கிண்டல்
 8 வாலிபர்கள் கைது


இராமநாதபுரம் :

                         இராமேசுவரம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 19), கார்த்திக் (18), பாலமுருகன் (19), மணி (20), அருண் (20), விக்னேஷ் (21), கவுதம் (20), குமரேசன் (19) ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலை கோவிலுக்கு சென்று இருந்தனர். கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு நேற்று மாலை மதுரை ரெயில் நிலையம் வந்தனர்.

பின்னர் அவர்கள் 6.05 மணிக்கு புறப்பட்ட இராமேசுவரம் பயணிகள் ரெயிலில் ஏறினர். அவர்கள் பயணம் செய்த பெட்டியில் பெண் பயணிகள் அதிகம் பேர் இருந்தனர். ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த வாலிபர்கள் கூச்சல் போட்டும், பெண்களை கேலி–கிண்டல் செய்தனர்.

அங்கு இருந்த மற்றவர்கள் அந்த வாலிபர்களை கண்டித்தனர். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கேலி செய்தும், ஆபாசமாக திட்டினர். இதனை தொடர்ந்து இராமநாதபுரம் வெளிபட்டிணத்தை சேர்ந்த சலீம் (49) என்பவர் ரெயில்வே போலீசாரிடம் புகார் செய்தார்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் இராமநாதபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

ரெயில் இராமநாதபுரம் ரெயில் நிலையம் வந்ததும் டி.எஸ்.பி. முரளிதரன் பி–1 காவல் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் சாது ரமேஷ் ஆகியோர் பெண் பயணிகளை கிண்டல் செய்த வாலிபர்கள் வெங்கடேஷ், கார்த்திக், பாலமுருகன் உள்பட 8 பேரையும் பிடித்து ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 8 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top