இராமேசுவரத்தில் இந்து முன்னணி நிர்வாகி அடித்துக்கொலை
ஒருவர் கைது-5 பேருக்கு வலைவீச்சு
இராமேசுவரம், ஜூலை 8 :
இராமேசுவரத்தை சேர்ந்தவர் குட்டநம்பு (வயது54). இவர் இந்து முன்னணி ஒன்றிய துணைத்தலைவராக இருந்து வந்தார். மனைவி, 6 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
நேற்றிரவு 11.30 மணி அளவில் ரெயில்வே ரோடு பகுதியில் 6 பேர் கும்பலுக்கும், குட்டநம்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் 6 பேர் கும்பல், குட்டநம்புவை கல்லால் அடித்து காயப்படுத்தி உள்ளது. இதில், பலத்த காயம் அடைந்த குட்டநம்பு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து டி.எஸ்.பி. மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் கருணாநிதி, சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மாந்தோப்பு பகுதியை சேர்ந்த 6 பேர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக ராமச்சந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
0 comments