ஜிம்பாப்வேக்கு எதிரான 3–வது ஒரு நாள் போட்டியில்
இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஹராரே, ஜூலை 28:
இந்தியா– ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்கியது.
’டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் வீராட் கோலி, ஜிம்பாப்வே அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
தொடக்க வீரர்களாக ஜிம்பாப்வேயின் சிபாண்டா- சிகந்தர் ரஸா களம் இறங்கினார்கள். சிபாண்டர் ரன் ஏதும் எடுக்காமல் வினய் குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். ரஸா 1 ரன்னில் முகமது சமி பந்தில் அவுட் ஆனார்.
’டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் வீராட் கோலி, ஜிம்பாப்வே அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
தொடக்க வீரர்களாக ஜிம்பாப்வேயின் சிபாண்டா- சிகந்தர் ரஸா களம் இறங்கினார்கள். சிபாண்டர் ரன் ஏதும் எடுக்காமல் வினய் குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். ரஸா 1 ரன்னில் முகமது சமி பந்தில் அவுட் ஆனார்.
அதன்பின் வந்தவர்கள் தொடர்ச்சியாக அவுட் ஆக ஜிம்பாப்வே 46 ஓவரில் 183 ரன் எடுப்பதற்குள் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 45 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் மிஸ்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.
184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷர்மா மற்றும் தவான் களம் இறங்கினார்கள்.
இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொண்டுவந்த நிலையில் ஷர்மா 14 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் தவானுடன் ஜோடி சேர கோலி களம் இறங்கினார்.
சிறப்பாக விளையாடி வந்த தவான் 32 பந்தில் 35 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்து கோலியுடன் ஜோடி சேர்ந்த ராயுடு 33 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து கோலியுடன் ரைனா ஜோடி சேர்ந்தார். இறுதியில் இந்திய அணி 35.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கோலி அதிரடியாக விளையாடி 68 ரன்னிலும் ரைனா 28 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருது மிஷ்ராவுக்கு வழங்கப்பட்டது.
5 ஒருநாள் போட்டி கொண்ட இந்த தொடரில்
இந்தியா 3-0 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரையும் வென்றுள்ளது.
0 comments