தண்டவாளத்தில் போதையில் படுத்த
20 வயது இளைஞர் மீது சரக்கு ரயில் ஏறி கை துண்டானது
நாகை :
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்தவர் அருள் (20). இவர் நாகை காடம்பாடியில் உள்ள சூர்யா நகரில் வசிக்கும் தனது அக்கா சாந்தியின் வீட்டில் தங்கி கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு வலது கை மணிக் கட்டு வரை துண்டான நிலையில் ரத்தம் சொட்டச் சொட்ட அருளை, அவரது அக்கா சாந்தி நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், சூர்யா நகரில் ரயில் தண்டவாளத்தில் மணிக்கட்டுடன் துண்டாகி கிடந்த அருளின் கையை நாகை ரயில்வே போலீசார் கைப்பற்றினர்.
இந்நிலையில், சூர்யா நகரில் ரயில் தண்டவாளத்தில் மணிக்கட்டுடன் துண்டாகி கிடந்த அருளின் கையை நாகை ரயில்வே போலீசார் கைப்பற்றினர்.
விசாரணையில் நேற்று முன்தினம் இரவு அருள் குடித்து விட்டு போதையில் தண்டவாளத்தில் கை வைத்து படுத்திருந்தபோது சரக்கு ரயிலில் அடிபட்டு கை துண்டாகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இதுபற்றி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
0 comments