முதலமைச்சர் ஜெயலலிதா பரிந்துரையின் பேரில்
தமிழக அமைச்சரவை மாற்றியமைப்பு -
புதிய அமைச்சர்களாக S.P. சண்முகநாதன் மற்றும் அப்துல் ரஹிம்
நியமனம்
தமிழக அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. திரு.சண்முகநாதன் மற்றும் ஆவடி எம்.எல்.ஏ. திரு.அப்துல் ரஹிம் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா, ஆளுநர் மாளிகையில் நாளை மாலை 4.45 மணி அளவில் நடைபெறுகிறது.
முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா பரிந்துரையின்பேரில், ஆளுநர் டாக்டர்.கே.ரோசய்யா தமிழக அமைச்சரவையை இன்று மாற்றியமைத்துள்ளார்.
இதன்படி,
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு.சி.த.செல்லப்பாண்டியன்,
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. ஏ.முகமது ஜான்
ஆகியோர் அமைச்சர் பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு.S.P. சண்முகநாதன், ஆவடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு.எஸ்.அப்துல் ரஹிம் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவின் பரிந்துரையின்பேரில், அமைச்சர்களின் இலாக்காக்களை மாற்றி அமைக்கவும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்படி, திரு.K.T. பச்சைமாலுக்கு, தொழிலாளர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர், தொழிலாளர் நலம், மக்கள் தொகை, பணி நியமனம் மற்றும் பயிற்சி, செய்தித்தாள் கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஊரக வேலைவாய்ப்பு ஆகிய துறைகளை கவனிப்பார்.
திரு.P.செந்தூர்பாண்டியனுக்கு இந்து சமய அறநிலையத்துறையும்,
திரு.S.P.சண்முகநாதனுக்கு சுற்றுலாத்துறையும்,
திரு.எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு வனத்துறையும்
ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் திரு.எஸ்.அப்துல் ரஹிமுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், வெளிநாடு வாழ் இந்தியர், அகதிகள் மற்றும் வெளியேற்றப்பட்டோர் நலன் மற்றும் வக்ஃபு வாரியம் உள்ளிட்ட சிறுபான்மையினர் நலன் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் நாளை மாலை 4.45 மணி அளவில் பதவியேற்பார்கள் என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments