சாம்பியன் டிராபி கிரிக்கெட்
அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது இங்கிலாந்து
லண்டன்:
இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்து 10 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்த போட்டி மழை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இருந்து 24 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 23.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அணியின் கேப்டன் குக், 64 ரன்கள் அடித்தார்.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆட்டத்தை தொடங்கியது.
ஆனால், 24 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், 10 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
0 comments