இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை எதிர்த்து
சென்னையில் போராட்டம்
இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை எதிர்த்து சென்னையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீவுத்திடல் அருகே தென்னிந்திய ராணுவ தலைமை அலுவலகத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு
ஏற்கனவே, இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்க முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். நீலகிரி மாவட்டம், வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் பயிற்சி பெறும் இலங்கை அதிகாரிகள் இருவரையும் உடனடியாக வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மே 27-ம் தேதி தஞ்சாவூர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயற்சி அளிக்க மாட்டோம் என உறுதி அளித்த அதே நாளில் தான், இலங்கையைச் சேர்ந்த இரு ராணுவ அதிகாரிகளுக்கு நீலகிரியில் பயிற்சி தொடங்கியுள்ளதாகவும், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் தொடர்ந்து நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தமிழக மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் மீனவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இலங்கை ராணுவ அதிகாரிகள் இருவருக்கு நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் ராணுவப் பயிற்சி அளிக்க அனுமதித்திருப்பது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அமைந்துள்ளது என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுருந்தார்.
0 comments