இராமேசுவரம்- தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து:
இலங்கை தூதரக அதிகாரி தகவல்
இராமேசுவரம், ஜூன் 8:
இராமேசுவரம்- தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தென் இந்தியாவிற்கான இலங்கை தூதரக துணை உயர் கமிஷனர் அமீர் அஜ்வத் கூறினார்.
இராமநாதபுரம் மாவட்ட கீழக்கரையில்
நடந்த ஒரு விழாவில் பங்கேற்று
அமீர் அஜ்வத் கூறியதாவது:-
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகு, இந்து கோவில்கள் இடிக்கப்பபடுவதாக கூறப்படுவது தவறான தகவலாகும். இலங்கை ராணுவ மையத்திலே இந்து கோவில் உள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சே இரண்டு முறை திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
அதனால் ராமேசுவரம்- தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க இரு நாட்டு அரசுகளும் முடிவு செய்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கடந்த காலங்களில் இலங்கை திரிகோணமலையில் அமெரிக்காவின் படைத்தளம் அமைக்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால், இலங்கை அரசும் அதை ஏற்று அனுமதி அளிக்கவில்லை. தமிழகத்திற்கும், இலங்கைக்கும் பாரம்பரிய உறவு இருந்து வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments