ஆபாச வசனம் பேசய சந்தானம்: பெண்கள் எதிர்ப்பால் மனமாற்றம்
காமெடி நடிகர் சந்தானம் பெண்களை கொச்சைப்படுத்தும் இரட்டை அர்த்த வசனங்கள் பேசி காமெடி செய்து வந்தார். அலெக்ஸ் பாண்டியன் படத்தில் உடன் பிறந்த தங்கைகள் பற்றி அவர் பேசிய வசனங்கள் அருவெறுப்பாய் இருந்ததாக விமர்சனங்கள் கிளம்பின.
இது போல் சேட்டை படத்திலும் பெண்களை இழிவுப்படுத்துவது போல வசனங்கள் இருந்ததாக எதிர்ப்புகள் கிளம்பின. கல்லூரி மாணவிகள் மற்றும் மகளிர் அமைப்புகளிடம் இருந்து கண்டனங்கள் வந்தன.
இதையடுத்து சந்தானத்திடம் மன மாற்றம் ஏற்பட்டு உள்ளது. பெண்களை கொச்சைப் படுத்துவது போல் வசனம் பேசி இனி நடிக்கமாட்டேன் என்று அவர் அறிவித்து உள்ளார். பெண்களை கவரும்படியும், யாரையும் புண்படுத்தாத வகையிலும் என் காமெடி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
0 comments