இராமநாதபுரத்தில் கல்லூரி மாணவி கடத்தல்
இராமநாதபுரம், ஜூன் 5:
இராமநாதபுரம் அரண் மனை தெருவைச் சேர்ந்தவர் நாகநாதன். இவரது மகள் அனிதா (வயது20). இவர் அங்குள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதி ஆண்டு படித்து வந்தார். அதிகாலையில் வீட்டின் முன்பு கோலம் போட்டார். அதன் பின்னர் அவரை காணவில்லை. இதனால் கவலை அடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் தேடினர்.
விசாரணையில் அவர் கடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து இராமநாதபுரம் பஜார் போலீசில் நாகநாதன் புகார் செய்தார். அதில், எனது மகள் அனிதா வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டு இருந்தபோது 2 வாலிபர்கள் அவரை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று விட்டனர். அவரை மீட்டுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட கல்லூரி மாணவி அனிதாவை தேடி வருகிறார்கள்.
0 comments