1 June 2013

இந்தியன் பிரிமியர் லீக் தலைவர் பதவியிலிருந்து ராஜிவ் சுக்லா ராஜினாமா

இந்தியன் பிரிமியர் லீக் தலைவர் பதவியிலிருந்து ராஜிவ் சுக்லா ராஜினாமா

புதுடில்லி:
           
             இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் வெளியானதை தொடர்ந்து, அந்த அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து ராஜிவ் சுக்லா ராஜினாமா செய்துள்ளார்.

                 

              நடந்து முடிந்த ஆறாவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கீத் சவான் மற்றும் புக்கிகள் கைதில் தொடங்கி, பாலிவுட் நடிகர் வின்டூ மற்றும் சென்னை அணி நிர்வாகியும், பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன் கைதில் வந்து நிற்கிறது. இது பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என சீனிவாசனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என பல தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. சீனிவாசன் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பி.சி.சி.ஐ., செயலாளர் சஞ்சய் ஜக்தாலே, பொருளாளர் அஜய் ஷிர்கே ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்து, அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளனர். இந்நிலையில், நாளை பி.சி.சி.ஐ.,யின் அவசர கூட்டத்திற்கு சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில்,சீனிவாசன் பதவி தப்புவது கடினம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

                         இதனிடையே, சீனிவாசனுக்கு மேலும் நெருக்கடி ஏற்படும் வகையில், இதுவரை அவருக்கு ஆதரவாக பேசி வந்த, ராஜிவ் சுக்லா இந்தியன் பிரிமியர் லீக் அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். ஸ்பாட் பிக்சிங் விவகாரம் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாளை பி.சி.சி.ஐ., அவசரக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ராஜிவ் சுக்லா, ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனது ராஜினாமா குறித்து அவர் கூறுகையில், "இந்தியன் பிரிமியர் லீக் அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். பதவி விலகுவது குறித்து கடந்த சில நாட்களாக ஆலோசனை செய்து வந்தேன். இதுவே பதவிவிலக சரியான நேரம்" என பி.டி.ஐ., செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

                            மேலும் அவர், "சஞ்சய் ஜக்தாலே, அஜய் ஷிர்கே ஆகியோர் கிரிக்கெட் நலன் கருதி தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். நானும் பதவி விலக இதுவே சரியான நேரம். இந்தியன் பிரிமியர் லீக் தலைவராக நியமிக்கப்பட்ட நான், எனது கடமையை சிறப்பாக நிறைவேற்ற முயற்சி செய்தேன். பல சர்ச்சைகளை கடந்து தொடர் நடத்தப்பட்டது. மைதானத்தில் கூடிய ரசிகர் கூட்டத்திலிருந்து இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளுக்கு இன்னும் ஆதரவு உள்ளது தெரியவந்துள்ளது. எனக்கு வழங்கப்பட்ட பதவி மீது அதிக ஆசைப்பட்டதில்லை. மாறாக எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற முயற்சி செய்தேன்" என கூறினார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top