சென்னையின் இன்று பல்வேறு இடங்களில் பலத்த மழை
சென்னை, ஜூன் 2:
தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளா, கர்நாடகம், தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் நேற்று முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று காலை சென்னையில் வெயில் அடித்தது. மதியம் 1 மணிக்கு திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. இதனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 2 மணி, மாலை 6 மணி போல் காட்சியளித்தது. இந்நிலையில் மாலை 3.30 சென்னை நகரின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது.
ஈக்காட்டுதாங்கல், கிண்டி, வடபழனி, செங்குன்றம் இடங்களில் மழை பெய்து வருகிறது. கடும் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை மக்கள் இந்த மழையால் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நகர் முழுவதும் பரவியுள்ளது.
0 comments