சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் :
தென்னாப்ரிக்காவுக்கு 332 ரன்கள் இலக்கு
தடுமாறிய தென்னாப்ரிக்கா 212/6.
மினி உலகக் கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலந்தின் கார்டிஃப் (Cardiff) மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. தென்னாப்பிரிக்க அணியுடனான முதல் ஆட்டத்தில் இந்திய அணி, 331 ரன்களை குவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தமது முதல் சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை முதல் போட்டியில், இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி, சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தது. தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தென்னாப்ரிக்க அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.
இதன்மூலம், முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி, 127 ரன்கள் குவித்தது. ரோஹித் ஷர்மா 65 ரன்களில் ஆட்டமிழக்க, ஷிகர் தவானுடன் விராட் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். பின்னர், ஷிகர் தவான் 80 பந்துகளில் சதம் அடித்து, ஒருநாள் கிரிக்கெட் களத்தில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 94 பந்துகளில் 114 ரன்கள் எடுத்திருந்தபோது, ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 331 ரன்களை குவித்துள்ளது.
தென்னாப்ரிக்கா 212/6. Overs 35
0 comments