தர்மபுரியில் கிட்னி மோசடியில் 2 பேர் கைது
தருமபுரி, ஜூன் 10:
தருமபுரியில் சிறுநீரக மோசடி தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட எஸ்.பி. அஷ்ரா கார்க் கூறியதாவது:-
தருமபுரியில் சிறுநீரக மோசடிக் கும்பல் பற்றி புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு பாலசுப்பிரமணியம், அய்யாவு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் 30-க்கும் மேற்பட்டவர்களிடம் அவர்கள் சிறுநீரக மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஏழைகளை குறிவைத்தே அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments