28 May 2013

குருப்பெயர்ச்சி பலன்கள் : மிதுன ராசி

குருப்பெயர்ச்சி பலன்கள் :  மிதுன ராசி


மிதுனம் :

(மிருக சீரிஷம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ம் பாதங்கள்) எப்போதும் கலகலப்பாக இருக்கும் மிதுன ராசி அன்பவர்களே! குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருந்தார். அவர் பல்வேறு இடையூறுகளை கொடுத்து இருப்பார். பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு இருக்கும். இப்படி பிற்போக்கான பலனைத் தந்த குருபகவான் தற்போது உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைத்துள்ளார். இதுவும் அவ்வளவு சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவர் 12-ம் இடத்தில் இருந்ததுபோல கெடு பலன்களை செய்ய மாட்டார். ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்-என்று ஜோதிடத்தில் ஒரு வாக்கு உண்டு. அதாவது ராமரின் ஜாதகத்தில் 1-ம் இடத்தில் குரு இருக்கும்போது வனவாசம் செல்ல நேரிட்டது என்று கூறுகிறது. அந்த நிலை உங்களுக்கு வராது. காரணம் ராமரின் ஜாதக நிலைவேறு உங்களுடைய கிரக நிலை வேறு. ராமர் தெய்வ அவதாரம். நாம் மனிதர்கள். பொதுவாக குரு 1-ம் இடத்தில் இருக்கும்போது கலகம் விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் கூறப்படுவது உண்டு. அதற்காக கவலைப்பட வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரின் அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. குருவின் பார்வைக்கு கோடிநன்மை உண்டு. அவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை பார்ப்பார். அந்த மூன்று இடங்களும் சாதகமாக இருப்பது விசேஷம். இதனால் உங்களுக்கு வரும் இடையூறுகள் அனைத்தும் முறியடித்து வெற்றிக்கு வழிவகுப்பார். குருவின் 5-ம் இடத்தின் பார்வை துலாமில் விழுகிறது. இதன் மூலம் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். 7-ம் இடத்துப் பார்வை தனுசுவில் விழுகிறது. அதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை நடத்தி வைப்பார். செல்வாக்கு மேம்படும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வைத் தருவார். 9-ம் இடத்துப்பார்வை கும்பத்தில் விழுகிறது. இதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். மற்றும் முக்கிய கிரகமான கேது பல்வேறு நன்மை தருவார். அந்த வகையிலும் குரு மற்றும் சனிபகவானின் பார்வைகளால் நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் விரிவான பலனைக் காணலாம். 

                                                             கடந்த காலத்தைவிட நன்மைகள் அதிகம் கிடைக்கும். உங்கள் மனதில் இருந்த உளைச்சல் அடியோடு நீங்கும். எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும். நல்ல பணப்புழக்கம் இருக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். பொருளாதார வளம் இருந்துகொண்டே இருக்கும் என்பதால் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். கணவன்- மனைவி இடையே அன்பு நீடிக்கும். அவ்வப்போது மனக்கசப்புகள் வரத்தான் செய்யும். ஆனால் அவை உங்கள் அணுகுமுறையால் விலகிவிடும். தடை பட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அதற்காக சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுபச் செலவுகளால் கடன் வாங்கும் நிலை வரும். உத்தியோகத்தில் கடந்த பிரச்சினையில் இருந்து விடுபடுவர். வேலையில் முன்னேற்றம் இருக்கும். ஆனாலும் வேலைப்பளு இருக்கத்தான் செய்யும். உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்காமல் போகாது. பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சற்று முயற்சி செய்தால் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். இடமாற்ற பீதி தொடரத்தான் செய்யும். வியாபாரிகள் முன்னேற்றப்பாதையில் செல்வர். வருமானம் அதிகரிக்கும். தொழில் லாபம் குறையாது. அதிகமாக அலைச்சல் இருக்கும். ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம். அரசின் உதவி அவ்வளவு எளிதாக கிடைக்காது. ஆனால் முய்ற்சி கைகொடுக்கும். எதிரிகள் இடையூறு அவ்வப்போது தலைதூக்கினாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். பொருள் விரையம் ஏற்படலாம். கலைஞர்கள் சிறப்பான பலன்களைக் காணலாம், புதிய ஒப்பந்தங்கள் பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். அதே நேரம் புகழ், பாராட்டு உங்களை வந்து சேரும். பண வரவும் இருக்கும். அரசியல்வாதிகள் சமூகசேவகர்கள் ஆகியோர் நற்பெயர் பெறுவர். பொதுமக்கள் மத்தியில் முன்பைவிட தற்போது சிறப்பு அடைவர். எதிலும் வெற்றி பெறுவர். மாணவர்கள் கடந்த ஆண்டு ஏற்பட்ட பிற்போக்கான நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றத்திற்கு வழி காண்பர். குரு சாதகமற்ற நிலையில் இருப்பதால் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டிய இருக்கும். 

                               ஆசிரியர்கள் சொற்படி நடந்தால் முன்னேற்றம் காண்பர். வக்கீல்கள்,ஆசிரியர்கள் தொழில் சிறந்து விளங்குவர். நல்ல வளத்தையும் அடைவர். விவசாயிகள் பழைய கஷ்டத்தில் இருந்து சற்று மீளலாம். அதிக உழைப்பு இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலனும் கிடைக்கும். அதிகமான பண முதலீடு செய்ய வேண்டாம். தேவையான மகசூல் கிடைக்கும். குறிப்பாக நெல், கோதுமை, சோளம் ஆகிய பயிர்கள் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். மானாவாரி பயிர்களின் அதிக மகசூல் கிடைக்கும். செப்டம்பர். அக்டோபர் மாதங்களில் புதிய சொத்து வாங்க வாய்ப்புகள் வரலாம். வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். அதிக பாதகம் ஏற்பட வாய்ப்பு இல்லை. பெண்கள் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அமைதியும், பொறுமையும் தேவை.  உடல் நலம் சிறப்படையும். 

பரிகாரம்:- வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். முருகன் கோவிலுக்குச் சென்று வாருங்கள். அதேபோல் சனீஸ்வரனுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி, எள் சோறு படைத்து பின்னர் அதனை காக்கைக்கு போடுங்கள். ஊனமுற்ற ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். காலபைரவருக்கு தயிர் சாதம் படைத்து வணங்கலாம். மேலும் ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யவும்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top