8 December 2013

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் காலிப்பணியிடங்களுக்கு பரிந்துரை

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் காலிப்பணியிடங்களுக்கு பரிந்துரை 



இராமநாதபுரம்:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவுதாரர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.

பட்டியல் எழுத்தர்

இராமநாதபுரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரால் அறிவிக்கப்பட்டுள்ள பருவகால பட்டியல் எழுத்தர் காலி பணியிடத்துக்கு பி.எஸ்.சி. பட் டப்படிப்பில் முதன்மை பாடமாக வேதியியல், தாவரவியல், உயிரியல் கல்வி தகுதியை உடையவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். 

1.7.2013 அன்று ஆதி திராவி டர் மற்றும் பழங்குடியினர் 18 முதல் 35 வயதுக்குள்ளும், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 32 வயதுக்குள்ளும், பொது போட்டியாளர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இருப்பினும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

இந்த பணிக்கு ஆண்கள் மட்டும் தகுதியுடையவர்கள் இதன்படி முன்னுரிமையுள்ளவர்கள் அனைவரும், முன் னுரிமையற்றவர்களில் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த அருந்ததியர் 2.8.2006 வரையும், ஆதிதிராவிட வகுப்பினர் 30.8.99 வரையும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 11.1.2002 வரையும், பிற்படுத்தப்பட்டு முஸ்லிம் வகுப்பை சேர்ந்தவர்கள் 26.4.95 வரையும், பிற்பட்ட வகுப்பினர் 10.10.94 வரையும், பொது போட்டியாளர்கள் 8.12.99 வரையும் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். 

எனவே தகுதியுடைய பதிவுதாரர்கள் தங்களது பெயர் பரிந்துரை செய்யப்பட உள்ள விவரத்தை வருகிற 10-ந்தேதிக்குள் உரிய சான் றுகள் மற்றும் அடையாள அட்டையுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து தெரிந்து கொள்ளலாம்.

காவலர்

                இதேபோல இங்கு காவலர் பணியிடத்துக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்துள்ள ஆண் பதிவுதாரர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். 

இதன்படி முன்னுரிமையுள்ளவர்கள் அனைவரும், முன்னுரிமையற்றவர்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 12.4.99 வரையும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர் 18.6.2007 வரையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 2.6.95 வரையும், பொதுப்போட்டியாளர்கள், ஆதிதிராவிடர்கள் மற்றும் அருந்ததியினர் 4.7.94 வரையும் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். 

எனவே காவலர் பணிக்கு தகுதியானவர்கள் தங்களது பெயர் பரிந்துரை செய்யப்பட உள்ள விவரத்தை வருகிற 11-ந் தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு உரிய சான்றுகள் மற்றும் அடையாள அட்டையுடன் நேரில் வந்து தெரிந்து கொள் ளலாம். இந்த தகவலை கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top