இராமேசுவரத்தில் காட்சிப்பொருளாக உள்ள கழிப்பறை கட்டிடங்கள் பக்தர்கள் கடும் அவதி
இராமேசுவரம்:
இராமேசுவரத்தில் நகராட்சி சார்பில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடங்கள் பயன்பாடு இல்லாமல் வெறும் காட்சிப் பொருளாக உள்ளது.
பக்தர்கள் அவதி
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் இராமேசுவரம் கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல் லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு இராமேசுவரம் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக அரசு சார்பில் ஒரு இடத்தில் கூட கழிப்பறை வசதிகள் ஏற்படுத் தப்படவில்லை. இதனால் பக் தர்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.
திருக்கோவிலுக்கு சொந்த மான ஜே.ஜே.நகர் வாகன நிறுத்துமிடத்திற்கு வரும் சிறிய வாகனங்களுக்கு ரூ.10ம்,பெரிய வாகனங்களுக்கு ரூ.20 கட்டணமும் வசூல் செய்யப்படு கிறது. ஆனால் வாகன நிறுத் துமிடத்தில் உள்ள கழிப்பறை கட்டிடங்களில் தண்ணீர் வராததால் கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே அவை மூடியே கிடக்கின்றன. மேலும் வாகன அந்த கழிப்பறை கட்டிடத்தில் உள்ள தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் மோட்டாரும் பழுதடைந்து கிடக்கிறது.
கழிப்பறை வசதி
ஜே.ஜே.நகர் வாகனம் நிறுத்துமிடத்துக்கு தினமும் சராசரியாக 120க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இதில் வந்திறங்கும் பக்தர்கள் கழிப்பறை செயல்படாததால் அதிக கட்டணம் செலுத்தி தனியார் அமைத் துள்ள கழிப்பறைகளுக்கு செல்கின்றனர். இதேபோல் ஈசுவரி அம்மன் கோவில் தெரு பகுதியில் நகராட்சியின் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஆண்கள், பெண்கள் கழிப்பறை கட்டிடமும், அக்னி தீர்த்த கடற்கரை அருகில் சங்குமால் பகுதியில் நகராட்சியின் நிதியில் இருந்து ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஆண்-பெண் கழிப்பறை கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இது வரையிலும் திறக்கப்படாமல் உள்ளது.
எனவே புண்ணிய தல மான இராமேசுவரத்தில் கோவிலுக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில் பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை கட்டிடத்தில் 24 மணி நேரமும் தண்ணீர் வசதி செய்து பயன் பாட்டிற்கு கொண்டு வரவும், நகராட்சியின் சார்பில் பணிகள் முடிக்கப்பட்டு காட்சி பொருளாக உள்ள கழிப்பறை கட்டிடங்களை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் முன் வர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments