7 December 2013

இலங்கை மீனவர்கள் 59 பேருக்கு காவல் நீட்டிப்பு

இலங்கை மீனவர்கள் 59 பேருக்கு காவல் நீட்டிப்பு 


இராமநாதபுரம்:

                  இலங்கை புத்தளம் பகுதியை சேர்ந்த பேஸ்கர்பிடோ உள்பட 26 பேர் கடந்த அக்டோபர் மாதம் 9–ந் தேதியன்று எல்லைதாண்டி வந்தபோது இந்திய கடலோர காவல்படையினரிடம் பிடிபட்டனர். இதேபோல் இலங்கை நீர்க்கொழும்பு குமார் வாஸ் உள்பட 5 பேர் செப்டம்பர் 18–ந் தேதியும், அணில்டென்சில் பெர்னாண்டோ உள்பட 24 பேர் கடந்த அக்டோபர் 30–ந் தேதியும் குருகுல சூரியா உள்பட 4 பேர் கடந்த 6–ந்தேதியும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக பிடிபட்டனர். 

மொத்தம் 59 மீனவர்களும் தூத்துக்குடி தருவைகுளம் போலீஸ் நிலையத்தில் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறையில் இருந்து வீடியோகான்பிரன்ஸ் முறை மூலம் ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி தர்மன், 59 மீனவர்களுக்கும் வருகிற 20–ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top