பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவு போலீசார் கைது செய்ததால் காதலியை மணந்தார் காதலன்
சென்னை:
காதலியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். பின்னர் உறவினர்கள் முன்னிலையில் காதலிக்கு தாலி கட்டினார்.பூண்டி அடுத்த நெய்வேலியை சேர்ந்தவர் வசுமதி (24), மேல்நல்லாத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். அதே கம்பெனியில் திருவள்ளூர் அடுத்த போலிவாக்கத்தை சேர்ந்த சீனிவாசன் (27), சூபர்வைசராக உள்ளார்.
கம்பெனிக்கு பஸ்சில் செல்லும்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. 4 ஆண்டாக காதலித்து வந்தனர்.கடந்த 18ம் தேதி திருப்பதி கோயிலில் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி, வசுமதியை சீனிவாசன் ரயிலில் அழைத்து சென்றுள்ளார்.
பிறகு லாட்ஜில் அறை எடுத்து தங்கியதுடன் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பெரியபாளையம் கோயிலில் திருமணம் செய்யலாம் என அழைத்து வந்துள்ளார்.அப்போது சீனிவாசனுக்கு அவரது தாய் விமலாவிடம் இருந்து போன் வந்ததால், பெரியபாளையத்திலுள்ள வசுமதியின் அக்கா வீட்டில் அவரை விட்டுவிட்டு சீனிவாசன் தலைமறைவாகி விட்டார். சீனிவாசனுக்கு வசுமதி போன் செய்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
பிறகு லாட்ஜில் அறை எடுத்து தங்கியதுடன் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பெரியபாளையம் கோயிலில் திருமணம் செய்யலாம் என அழைத்து வந்துள்ளார்.அப்போது சீனிவாசனுக்கு அவரது தாய் விமலாவிடம் இருந்து போன் வந்ததால், பெரியபாளையத்திலுள்ள வசுமதியின் அக்கா வீட்டில் அவரை விட்டுவிட்டு சீனிவாசன் தலைமறைவாகி விட்டார். சீனிவாசனுக்கு வசுமதி போன் செய்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 21ம் தேதி வசுமதி புகார் செய்தார். அதில், சீனிவாசன் என்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார் என குறிப்பிட்டிருந்தார்.
இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், எஸ்ஐ பாரதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை தேடினர். போளிவாக்கம் வீட்டில் இருந்த சீனிவாசனை நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்தனர்.அப்போது, வசுமதியை திருமணம் செய்து கொள்வதாக சீனிவாசன் கூறினார்.
இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், எஸ்ஐ பாரதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை தேடினர். போளிவாக்கம் வீட்டில் இருந்த சீனிவாசனை நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்தனர்.அப்போது, வசுமதியை திருமணம் செய்து கொள்வதாக சீனிவாசன் கூறினார்.
இதைத்தொடர்ந்து ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்டப்பள்ளி கோயிலில் உறவினர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காவல்நிலையத்தில் திருமணம் செய்ததை எழுதி கொடுத்துவிட்டு சென்றனர்.
0 comments