இசைப்பிரியா கொலை பற்றிய சேனல்-4 வெளியிட்ட வீடியோ போலியானது: இலங்கை சொல்கிறது
கொழும்பு, நவ. 2:
விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இசைப்பிரியா, இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது கொல்லப்பட்டதாக இலங்கை அரசு இதுவரை கூறி வந்தது. ஆனால், அவரை ராணுவ வீரர்கள் பிடித்து இழுத்துச் சென்ற வீடியோ பதிவை சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டது.
இதன்மூலம் இலங்கை அரசின் போர்க்குற்றத்திற்கு தற்போது புதிய ஆதாரம் கிடைத்திருப்பதால், அந்நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது என்று தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சேனல்-4 வெளியிட்ட வீடியோ போலியானது என்றும், இலங்கை தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இசைப்பிரியா, இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது கொல்லப்பட்டதாக இலங்கை அரசு இதுவரை கூறி வந்தது. ஆனால், அவரை ராணுவ வீரர்கள் பிடித்து இழுத்துச் சென்ற வீடியோ பதிவை சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டது.
இதன்மூலம் இலங்கை அரசின் போர்க்குற்றத்திற்கு தற்போது புதிய ஆதாரம் கிடைத்திருப்பதால், அந்நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது என்று தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சேனல்-4 வெளியிட்ட வீடியோ போலியானது என்றும், இலங்கை தெரிவித்துள்ளது.
“ஐ.நா. மனித உரிமை ஆணைய அமர்வுகள் மற்றும் காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ள முக்கியமான இந்த சமயத்தில், இலங்கையை இழிவுபடுத்தும் வகையில் சேனல்-4 வெளியிட்ட இந்த வீடியோ பதிவில் புதிதாக ஒன்றும் இல்லை.
இந்த வீடியோவை நாங்கள் நிராகரிக்கிறோம். இது முழுவரும் செயற்கையாக உருவாக்கப்பட்டுளள்து. சரண் அடைந்த அல்லது பிடிபட்ட புலிகளை ஒருவரும் ராணுவத்தால் கொல்லப்படவில்லை” என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் ருவான் வணிகசூர்யா தெரிவித்தார்.
0 comments