2 November 2013

சிறப்பு சலுகையாக நகை, ஆடை தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி

சிறப்பு சலுகையாக நகை, ஆடை தீபாவளி சீட்டு நடத்தி 
பல லட்சம் ரூபாய் மோசடி


சென்னை : 

           மணலியை சேர்ந்தவர் கவுசல்யா (40). கூலி தொழிலாளி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்: மணலி டாக்டர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த மோகன், அவரது மனைவி மேரி ஆகியோர் எம்.கே.தீபாவளி சிறப்பு பண்ட் என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்தினர். ரூ.50 வீதம் 52 வாரம் என ரூ.2600 செலுத்தினால் கட்டிய பணம் மேலும் பட்டாசு, பேண்ட் சர்ட், புடவை,

அரை சவரன் நகை, ஸ்வீட் பாக்ஸ் தருவதாக உறுதி அளித்தனர். அதன்படி, 54 பேரை சேர்த்து விட்டேன். தற்போது, சீட்டு நிறைவு பெற்று விட்டது. இதை தொடர்ந்து கடந்த 25ம் தேதி மோகனிடம் சென்று தீபாவளி சீட்டு பணம் மற்றும் பரிசு பொருட்கள் தரும்படி கேட்டேன். ஆனால், அவர் 27ம் தேதி வரும்படி கூறினார்.

27ம் தேதி சென்றபோது, 28ம் தேதி தருவதாக உறுதி அளித்தார். அன்றைய தினம் சென்று பார்த்தபோது, மோகன் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியோடு தலைமறைவாகி விட்டார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. 

என்னை போன்று மோகனும், அவரது மனைவியும் 200க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி உள்ளனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top