5 October 2013

சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கைது: இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்

சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கைது
 இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்



லண்டன், அக். 5:–


சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இலங்கை தமிழர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் விசாரணை நடத்தி இவர்களின் புகலிடக் கோரிக்கையானது 2011–ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. மேலும் இவர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு செல்லுமாறு சுவிஸ் அரசாங்கம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இவர்களில் ஒருவர், நாங்கள் எங்கள் நாட்டிற்கு சென்றால் எங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் எனவே எங்களை திருப்பி அனுப்ப வேண்டாம் எனவும் சுவிஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையானது அகதிகள் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையருக்கு எடுத்து செல்லப்பட்டது. சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர்கள் ஏராளமாக வசிக்கின்றனர்.

மேலும் இலங்கையில் 1972 மற்றும் 2009–ம் ஆண்டுகளில் நடைபெற்ற போரில் சுமார் 1 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மனித உரிமை தலைவர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இலங்கை அரசோ இதனை மறுத்துவிட்டு சமரச செயல்களில் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top