கட்டண உயர்வு அமலுக்கு வந்தது கட்டண வித்தியாசத்தை பரிசோதகர்கள் வசூலிக்கின்றனர்.
சென்னை :
ரயில் கட்டண உயர்வு 10 மாதங்களில் 2வது முறையாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. டீசல் உயர்வு காரண மாக காட்டி அறிவிக்கப்பட்ட இந்த கட்டண உயர்வு புறநகர் ரயில்கள், சீசன் டிக்கெட்களை தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் பொருந்தும். 2 சதவீத கட்டண உயர்வு என்று சொன்னாலும் ரயில்வேயில் எதையும் 5 ரூபாயாக, 10 ரூபாயாக மாற்றும் நடைமுறை உள்ளது. எனவே நூற்றுக்கு 2 ரூபாய் என்றாலும் நூறு ரூபாய் வரை 5 ரூபாய் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும். எனவே, குறைந்தப்பட்ச கட்டண உயர்வு 5 சதவீதம்.
அதேபோல் ஏசி வகுப்புகளுக்கு, முதல்வகுப்பு ஆகியவற்றுக்கு 2 சதவீத கட்டண உயர்வுடன் அதற்கான 3.78 சதவீதம் சேவைக்கட்டணமும் செலுத்த வேண்டும். அதாவது உயர் வகுப்புகளுக்கு கட்டண உயர்வு 2.8 சதவீதம். இந்த கட்டண மாற்றங்கள் அமலுக்கு வந்ததையடுத்து ஏற்கனவே முன்பதிவு செய்து நேற்று விடியற்காலை முதல் பயணம் செய்யும் பயணிகளிடம் பரிசோதகர்கள் கட்டண வித்தியா சத்தை வசூலித்தனர்.
பரிசோதகர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் இப்படி ஒவ்வொரு பயணிடமிருந்தும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வேலை யால் பரிசோதகர்கள் சிரமத்திற்குள்ளாயினர். சில பெட்டிகளில் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இரவு நேர ரயில்களில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் வருவார்கள் என்று பயணிகள் தூங்காமல் நீண்ட நேரம் காத்திருந்த அவலமும் இருந்தது.
கடந்த ஜனவரி மாதம் 30 சதவீதம் வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அப்போது முக்கிய ரயில்நிலையங்களிலும், முன்பதிவு மையங்களிலும் கூடுதல் கட்டணத்தை வசூலிக்க தனி மையங்கள் தொடங்கப்பட்டன. அதுதவிர பயணச் சீட்டு பரிசோதகர்களிடம் நேரடியாக கட்டணம் செலுத்தப்பட்டது.
0 comments