ஆயுதங்களை கீழேபோட முடியாது
பாகிஸ்தான் தலிபான்கள் திட்டவட்டம்
இஸ்லாமாபாத், செப்.29:
பாகிஸ்தான் அரசுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தலிபான்கள் விரும்பினால் ஆயுதங்களை தூர எறிந்து விட்டு பாகிஸ்தானின் அரசியலமைப்பு சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக அவர்கள் அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நவாஸ் ஷெரீப் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கம் நாங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கும் கட்டுப்பட மாட்டோம். ஆயுதங்களையும் கீழேபோட முடியாது என்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அவ்வியக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஷஹிதுல்லா ஷஹித் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-
எங்களது நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கனவே விளக்கி விட்டோம். எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அந்த அதிகாரம் ராணுவத்திடமும் அமெரிக்காவிடமும் மட்டும்தான் உள்ளது.
எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரம் தங்களுக்கு உண்டு என்று அரசு நிரூபித்தால் அதன்பின்னர் அரசுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவது தொடர்பாக நாங்கள் பரிசீலனை செய்வோம்.
அந்த அதிகாரம் தன்னிடம் இல்லை என்பதை நவாஸ் ஷெரீப் நிரூபித்துள்ளார்.
பாகிஸ்தானில் இருக்கும்போது அவர் ஒருமாதிரியாக பேசுகிறார். தற்போது, அமெரிக்காவில் இருந்துக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனை விதித்து பேசுகிறார்.
ஆயுதங்களை கீழேபோட்டுவிட்டு அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என இப்போது அவர் கூறுகிறார். இதற்கு நாங்கள் ஒப்புக்கொண்ட பிறகு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அவசியமே இல்லை.
இவ்வாறு அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அரசுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தலிபான்கள் விரும்பினால் ஆயுதங்களை தூர எறிந்து விட்டு பாகிஸ்தானின் அரசியலமைப்பு சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக அவர்கள் அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நவாஸ் ஷெரீப் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கம் நாங்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கும் கட்டுப்பட மாட்டோம். ஆயுதங்களையும் கீழேபோட முடியாது என்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அவ்வியக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஷஹிதுல்லா ஷஹித் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-
எங்களது நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கனவே விளக்கி விட்டோம். எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அந்த அதிகாரம் ராணுவத்திடமும் அமெரிக்காவிடமும் மட்டும்தான் உள்ளது.
எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரம் தங்களுக்கு உண்டு என்று அரசு நிரூபித்தால் அதன்பின்னர் அரசுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவது தொடர்பாக நாங்கள் பரிசீலனை செய்வோம்.
அந்த அதிகாரம் தன்னிடம் இல்லை என்பதை நவாஸ் ஷெரீப் நிரூபித்துள்ளார்.
பாகிஸ்தானில் இருக்கும்போது அவர் ஒருமாதிரியாக பேசுகிறார். தற்போது, அமெரிக்காவில் இருந்துக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனை விதித்து பேசுகிறார்.
ஆயுதங்களை கீழேபோட்டுவிட்டு அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என இப்போது அவர் கூறுகிறார். இதற்கு நாங்கள் ஒப்புக்கொண்ட பிறகு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அவசியமே இல்லை.
இவ்வாறு அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
0 comments